தமிழ்நாடு
விடுதலை அறிவித்து 7 ஆண்டுகள் ஆச்சு… வேதனையில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள்..!
பேரறிவாளன் விடுதலை அறிவித்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்தும் இன்னமும் தன் மகன் விடுதலை ஆகவில்லையே என வேதனை தெரிவித்துள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
கடந்த 1991-ம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பேரறிவாளன். அதன் பின்னர் வழக்கின் தன்மை வெளிப்பட்டு பேரறிவாளனின் விடுதலைக்காகப் பலமுறை தமிழகம் சார்பிலும் தமிழ்நாடு அரசு சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் முடிவு என மத்திய அரசு கைவிரித்த போதும் இதுவரையில் பேரறிவாளனின் விடுதலையை தமிழக ஆளுநர் அறிவிக்கவில்லை.
பேரறிவாளனின் விடுதலையை உறுதி செய்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்த போதும் இதுவரையில் மகன் விடுதலை ஆகவில்லை என தொடர்ந்து பேரறிவாளனின் விடுதலைக்காகப் போராடி வரும் அவரது தாயார் அற்புதம்மாள் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அற்புதம்மாள் கூறுகையில், “நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே. “உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது. இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது – இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்?” என்றுள்ளார்.
நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே.
“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது.
இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது – இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? pic.twitter.com/sVFPvHycf2
— Arputham Ammal (@ArputhamAmmal) February 19, 2021