Connect with us

தமிழ்நாடு

கொரோனா வழக்குகள் ரத்து அறிவிப்பு: போட்டோ பகிர்ந்து முதல்வர் பழனிசாமியை வறுத்தெடுத்த ஸ்டாலின்!

Published

on

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அறிவித்தார். இது குறித்து சில நாட்களுக்கு முன்னரே திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே ஸ்டாலின் சொன்ன பிறகுதான் முதல்வர் பழனிசாமி செய்கிறார் என்று திமுக தரப்பினர் கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில், தன் பழையை அறிக்கையையும், முதல்வர் அறிவிப்பையும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்தில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடு உத்தரவுகளைப் பிறப்பித்தது. இந்த உத்தரவுகளை மீறி செயல்பட்டவர்கள் மீது அரசு, வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்குகள் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

edappadi palanisamy

தென்காசி, கடையநல்லூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, ‘கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இந்த கொரோனா காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பலர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட குறிப்பிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிநில் ஈ பாஸ் பெற்று பயன்படுத்திய வழக்குகள், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டி போடப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவைத் தவிர மற்ற வழக்குகளில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்காமல் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறினார்.

இந்நிலையில் ஸ்டாலின், கடந்த மாதம் 22 ஆம் தேதி தான் வெளியிட்ட அறிக்கையையும், முதல்வரின் இன்றைய அறிவிப்பையும் ஒப்பிட்டு படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் மேலும், ‘கோவில்-19 ஊரடங்கில் மக்களை வழக்குகளால் வதைத்தார்கள்! அப்பொழுதே சுட்டிக்காட்டி மீண்டும் ஜனவரியிலும் எடுத்துரைத்தேன்.

அலட்சியம் காட்டிய முதல்வர் பழனிசாமி, தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என அறிவித்திருக்கிறார். முதலைக் கண்ணீரை மக்கள் நன்கறிவர். அறிவிப்பாக இல்லாமல் விரைந்து நிறைவேற்றுக’ என்று தெரிவித்துள்ளார்.

 

ஆரோக்கியம்9 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்21 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்33 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்45 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்54 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!