சினிமா செய்திகள்
‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து ‘சூப்பர்ஸ்டார்’ நடிகர் விலகிவிட்டாரா..?
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சூப்பர்ஸ்டார் நடிகர் ஒருவர் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் மணிரத்னம் தரப்பு எதுவும் அறிவிக்கவில்லை.
இயக்குநர் மணிரத்னைன் பெரும் படைப்பாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் நாயகர்களாக ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர்கள் விக்ரம், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் என மிகப் பெரிய நடிகர்கள் குழாமே நடித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்புக்கு முன்னரே பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கிய போது கொரோனா பாதிப்பால் தடைபட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் முதற்கட்டமாக ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா ஆகியோர் பங்களிப்புடன் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
கொரோனாவால் கால தாமதம் ஆனதால் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆன நடிகர் அமிதாப் பச்சன் படப்பிடிப்புக்குத் தேவையான தேதியை ஒதுக்கிக் கொடுக்க முடியவில்லையாம். இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நடிகர் அமிதாப் பச்சன் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.