உலகம்
சபரிமலைக்குள் பெண்கள் நுழைய கூடாது.. கேரளாவில் மாபெரும் போராட்டம்
![Ayyappa devotees protest - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/6.jpg)
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை இந்து அமைப்பினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக சில இடங்களில் நடந்து இப்போது பெரிய போராட்டமாக மாறியுள்ளது. முக்கியமாக பெண்கள் அதிக அளவில் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
கேரளா பாஜக தொடங்கி பல கட்சிகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்துத்துவா அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.
இந்த நிலையில் போராட்டத்தின் ஒரு கட்டமாக அங்கு சட்டசபை முற்றுகை செய்யப்பட்டுள்ளது. அங்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்காக அவசர சட்ட திருத்தம், கொள்கை முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.