Connect with us

கிரிக்கெட்

இன்று நடக்கும் ஐபிஎல் ஏலம்.. சிஎஸ்கே யாரை குறிவைக்கும்? லிஸ்டில் உள்ள வீரர்கள் இவங்க தான்

Published

on

Ipl auction 2021: what to expect from dhoni and co

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மெகா எல்லாமாக இல்லாமல் மினி ஏலமாக இவை இருந்தாலும் கூட இம்முறை பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த ஐபிஎல் சீசன் மறக்க முடியாத ஒன்று. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக சிஎஸ்கே ப்ளே ஃஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் போனது கடந்த ஐபிஎல் சீசனில் தான். இதனால் சிஎஸ்கே இம்முறை அணியை பலப்படுத்த திட்டமிட்டு வருகிறது. கடந்தாண்டு தொடரில் இருந்து வெளியேறிய ரெய்னா மீண்டும் அணியுடன் இணைந்திருக்கிறார். ஆனால் அவருடைய பிட்னஸ் கேள்விக்குறிதான்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஏலத்திற்காக கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா, முரளி விஜய், மோனும்குமார், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன் உள்ளிட்ட வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. இதில் வாட்சன் மட்டும் ஒய்வு பெற்றுவிட்டார். இதனால் சிஎஸ்கேவிடம் இப்போது 19.90 கோடி கைவசம் உள்ளது. இவர்களுக்கு மாற்றாக சென்னை அணியால் ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 6 வீரர்களை இம்முறை ஏலத்தில் எடுக்க முடியும்.

Also Read: சென்னை டெஸ்டில் கோலி கொடுத்த ரியாக்‌ஷன்; வைரல் மீம் கன்டென்டாக மாறிய போட்டோ!

சென்னை அணியில் கடந்த சீசனில் தொடக்க வீரர் தான் பிரச்சனை என்பதால், வாட்சனுக்கு மாற்றாக வேறு ஒரு அனுபவ வீரரை வாங்க திட்டமிடலாம். அதன்படி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், மற்றும் டேவிட் மாலன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களில் ஒருவருக்கு குறிவைக்கலாம்.

Ipl auction 2021: what to expect from dhoni and co

அதே போல ரெய்னா நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு குறைந்துள்ளது. பிராவோவும் பார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். மிடில் ஆர்டரில் தோனி இருப்பது சென்னை அணிக்கு எப்போதும் பலம் தான் என்றாலும் கடந்த சீசன் முழுவதும் தோனி அத்தகைய அதிரடி ஆட்டங்கள் ஆடவில்லை என்பதால், ஒரு ஹிட்டர் பேட்ஸ்மேனுக்கு குறிவைக்க நினைக்கலாம்.

மேக்ஸ்வெல்

அப்படி அந்த இடத்துக்கு வெளிநாட்டு வீரரை குறிவைத்தால் பெரும்பாலும் மேக்ஸ்வெல் அந்த இடத்துக்கு தேர்வாக வாய்ப்புள்ளது. அதேநேரம் உள்நாட்டு வீரர்களில் யாரையும் குறிவைக்கலாம். கடந்த செய்யத் முஸ்தாக் அலி தொடரில் கோப்பையை கைப்பற்றிய தமிழக அணியில் இடம்பெற்ற பல தமிழக வீரர்களும் இந்த ஏலத்தில் குறிவைக்கப்பட உள்ளனர்.

சிஎஸ்கேவில் ஏற்கனவே ஜெகதீசன் இருப்பதால், பாபா அபரஜித், ஷாருக் கான் உள்ளிட்ட வீரர்களை அதிரடி பேட்ஸ்மேனுக்கான இடத்தில் சென்னை அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் மற்றொரு யோசனையை சென்னைக்கு கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங்கை ரிலீஸ் செய்துள்ள நிலையில் அவருக்கு மாற்றாக மெயின் அலியை எடுக்கலாம் என கம்பீர் கூறியிருக்கிறார். அந்த அணியில் ஏற்கனவே லெக் ஸ்பின்னர்கள் மற்றும் இடதுகை ஸ்பின் பவுலர்களும் உள்ளனர். ஆனால் ஒரு ஆஃப் ஸ்பின் பவுலர் இருப்பது அணிக்கு நல்லது என்றும் கம்பீர் கூறியிருக்கிறார்.

இதனால் இன்று நடைபெறும் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை ஏலத்தில் எடுக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

author avatar
seithichurul
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்20 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்21 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!