சினிமா
கீர்த்திச் சுரேஷ் சண்டக்கோழி-2வுக்காகத் தெலுங்கில் டப்பிங் பேசியவர்!
நடிக்கத் தொடங்கிய குறுகிய காலத்திலே முன்னணி நடிகை ஆனார் கீர்த்திச் சுரேஷ். இவர் சண்டக்கோழி-2 படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே அதேநாளில் வெளியாகிறது. கீர்த்திச் சுரேஷ் முதன்முதலாகத் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த அஞ்ஞாதவாசி என்ற படத்திற்காகச் சொந்தக்குரலில் டப்பிங் பேசினார்.
அதையடுத்து பல படங்களில் டப்பிங் பேசியவர். தற்போது தெலுங்கில் வெளியாகும் சண்டக்கோழி 2 படத்திற்காகவும் தெலுங்கில் டப்பிங் பேவியிருக்கிறார்.
இந்தப் படம் தமிழைப்போலவே தெலுங்கிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாவதால் உற்சாகமாகியிருக்கிறார் கீர்த்திச் சுரேஷ்.