Connect with us

இந்தியா

5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள்; ட்விட்டருக்கு மாற்றாக வந்த Koo செயலிக்கு அடித்த ஜாக்பாட்

Published

on

ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்றாக வந்துள்ள ‘கூ’ செயலி, 5 நாட்களில் 9 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது. கூ செயலியின் ரீச் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள இன்னொரு தளம் தான் ‘கூ’ செயலி. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த செயலி ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்னும் பிரதமர் மோடி வலியுறுத்தும் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்திற்கு வலு சேர்ப்பதாக வலதுசாரிகள் கூறி வருகின்றனர். ‘ஆத்மநிர்பார் பாரத் செயலி போட்டியிலும்’ இந்த செயலி முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களில் இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதற்கென்று தனியாக ஒரு இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே ட்விட்டருக்கு அனைத்து வகைகளிலும் இந்த செயலி மாற்றாக இருக்கும் எனப்படுகிறது. சமீக காலமாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் உரசல் போக்கு நிலவி வருகிறது.

மத்திய அரசுத் தரப்பு, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக் கூறி வருபவர்களை அதன் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகிறது. அதற்கு இதுவரை அடிபணியாமல் இருந்து வருகிறது ட்விட்டர். இதையொட்டித் தான் வலதுசாரிகள், கூ செயலியைப் பயன்படுத்தப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்படி கூ செயலிக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வந்தாலும் அதில் தகவல் கசிவு இருப்பதாகவும், பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

கண்டுபிடித்து ஓராண்டே ஆகும் கூ செயலிக்கு, கடந்த ஆண்டு வெறும் 26 லட்சம் பயனர்களே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சென்ற ஆண்டு ட்விட்டரில் மட்டும் புதிதாக 2.8 கோடி பயனர்கள் வந்தனர். இப்படியான சூழலில் தான் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, கூ செயலியில் 9,01,000 புதிய பயனர்கள் உள்ளே வந்திருக்கிறார்களாம்.

வணிகம்2 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா13 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்13 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா14 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்14 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!