சினிமா செய்திகள்
‘சினிமாவில் ரீமேக் கான்செப்ட்-க்கு எதிரானவள் நான்…’- நடிகை மஞ்சிமா மோகன் பளிச்..!
சினிமாவில் ரீமேக் படங்களுக்கு முற்றிலும் எதிரானவள் நான் என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
மலையாள டிவி நிகழ்ச்சி ஒன்றில் மூலம் கேரளாவில் பிரபலமான மஞ்சிமா மோகன் மலையாளத்தில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ என்னும் திரைப்படம் மூலம் நாயகி ஆக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தமிழில் நடிகர் சிம்பு உடன் கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படத்தில் நாயகி ஆக கோலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
சமீபத்தில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்த மஞ்சிமா ரீமேக் படங்கள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். மஞ்சிமா கூறுகையில், “நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள். மலையாளத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் தமிழில் ரீமேக் செய்யும் போது படம் வெற்றி பெறுவதில்லை. பெரும்பாலும் இது அனைத்து இந்திய மொழிகளிலும் நடக்கிறது.
ஒரு மொழியில் உருவான படத்தை அப்படியே விட்டுவிட வேண்டும். அப்போது தான் அதன் அழகியல் நீடித்திருக்கும். அந்தந்த மொழிப் படங்களை அந்தந்த மொழிகளில் மட்டுமே பார்க்க வேண்டும். எதற்கு ரீமேக் செய்கிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டில் ஹிட் அடித்த நடிகை கங்கனா ரணாவத்-ன் ‘குயின்’ என்னும் படத்தின் மலையாள ரீமேக் படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மஞ்சிமா தற்போது விஜய் சேதுபதி உடன் துக்ளக் தர்பார், விஷ்னு விஷால் உடன் எஃப்.ஐ.ஆர், மலையாளத்தில் ஜம் ஜம் (குயின் ரீமேக்) ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.