Connect with us

உலகம்

சீனாவின் செயல் அவமானகரமானது.. எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மியான்மர் மக்கள்

Published

on

Myanmar students Protest outside Chinese embassy in Yangon

யாங்கோன்: மியான்மரில் ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவு ஆதரவளிப்பதை எதிர்த்து யாங்கோனில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மியான்மரில் கடந்த வாரம் திடீரென ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது. அங்கு ராணுவ சர்வாதிகாரம் என்பது புதிது கிடையாது. நீண்ட காலமாக ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நாட்டிற்கு சில வருடங்களுக்கு முன்னர் தான் ஜனநாயக ஆட்சியின் வெளிச்சம் கிடைத்தது. இருப்பினும் கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்று இருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி வந்தது.

இந்த நிலையில் தான் இந்த குற்றச்சாட்டை காரணமாக வைத்து ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது. ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா மியான்மர் மீது பொருளாதார தடையும் விதித்தது. ஆனால் அந்த சமயங்களில் சீனா மட்டும் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதி காத்து வந்தது.

Also Read: இந்தியர்களை அதிகம் நம்பும் பைடன்.. நிர்வாகத்தின் மற்றொரு உயர் பதவியில் இருவர் நியமனம்

இதற்கிடையே ஒருநாள் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், மியான்மரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம், நிலைமையை மேலும் புரிந்துகொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். மேலும் சீனா மியான்மரின் நட்பு நாடு. மியான்மரில் உள்ள அனைத்து தரப்பினரும் அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பின் கீழ் தங்கள் வேறுபாடுகளை சரியான முறையில் கையாள முடியும் மற்றும் அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை பாதுகாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறினார்.

இதன் பின்னர், மியான்மரின் 18 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு பகிரங்க கடிதம் அனுப்பினர், இராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் சிவில் அரசாங்கத்தை மீட்டெடுப்பதற்கான மியான்மர் மக்களின் விருப்பத்தை சீனா அங்கீகரிக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் ராணுவ நடவடிக்கை மற்றும் தலைவர்களை சிறை வைத்துள்ளதை சீனா அங்கீகரிக்க கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை மியான்மரின் உள்நாட்டு விவகாரம் என்று ஒதுங்கிக்கொள்ள பார்த்தனர். ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அமர்வின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மியான்மர் ராணுவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இருப்பினும் ஐநாவில் பேசிய சீன பிரதிநிதி மியான்மரில் தற்போது நடக்க கூடியவை அவர்களது உள் விவகாரங்கள் என்றார். ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் சீனாவுடன் இணைந்துகொண்டது. இதனால் இந்த இரண்டு நாட்டு தூதரகங்கள் முன்பு கூடிய மாணவர்கள் ராணுவ நடவடிக்கையை ஆதரிக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் அணைத்து தரப்பினரும் வீதியில் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவின் செயலால் வெட்கப்படுகிறோம் போன்ற கோஷங்களையும் போராட்டக்காரர்கள் எழுப்பினர். எங்கள் குரல்களைக் கேளுங்கள். ரஷ்யாவும் சீனாவும் தங்கள் சொந்த நலன்களுக்காக இராணுவ சதித்திட்டத்தை ஆதரிக்கின்றன. எங்களுக்கு அது தெரியும், இனிமேல் அவர்களை புறக்கணிப்போம் என்றும் போராட்டக்காரர்கள் கூறினர்.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா15 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்15 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா16 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்16 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!