Connect with us

தமிழ்நாடு

ஔவையார், பாரதியாரை மேற்கோளிட்டு ஆவேச உரை; பின்னர் எடப்பாடியாருடன் நடந்த சீக்ரெட் சந்திப்பு – மோடி வருகையும் நடந்ததும்..!

Published

on

இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி ஆவேசமாக பேசினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்தித்து கூட்டணி குறித்தும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார் பிரதமர் மோடி. 

இன்று காலை 10:30 மணி அளவில் புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார் மோடி. பின்னர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைத்தார். மிகக் குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையும், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வணக்கம் சென்னை’, ‘வணக்கம் தமிழ்நாடு’ எனக் கூறி உரையைத் தொடங்கினார். மேலும் அவர் ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து அவர், ‘சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி கொடுக்கிறது. இன்று ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் தமிழகத்தின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவும். 

விவசாய விளை பொருள் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.  கொரோனா காலத்திலும் திட்டமிட்டப்படி மெட்ரோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன’ என்றார். 

தொடர்ந்து அவர் மேடையிலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளைப் பிடித்து உயர்த்திக் காட்டினார். வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வைத்து களமிறங்கும் நிலையில், கூட்டணிக்குள் நிலவும் சலசலப்புகளைப் போக்கவே பிரதமர் மோடி இப்படியான காரியத்தைச் செய்தார் என சொல்லப்படுகிறது. 

நிகழ்ச்சி முடிந்த பின்னர் முதல்வர் பழனிசாமியோடு மட்டும் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் மோடி. அப்போது கூட்டணி வியூகங்கள் குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல். சில நாட்களுக்கு முன்னர் தான் சசிகலா, சிறையிலிருந்து விடுதலையாகி தமிழக அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அவர் கூடிய விரைவில் அதிமுகவைத் தன் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து வித திட்டங்களையும் தீட்டி வருகிறார் என உள் வட்டாரத் தகவல். இப்படியான சூழலில் எடப்பாடியாருடன் தனியாக ஆலோசனை, ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகிய இருவரது கைகளையும் ஒரே மேடையில் ஒன்றாக உயர்த்திப் பிடித்தது உள்ளிட்ட விஷயங்களை மோடி செய்துள்ளது, சசிகலாவை ஓரங்கட்டவே என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

எது எப்படி இருந்தாலும் மோடியின் வருகையால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!