Connect with us

இந்தியா

உச்சக்கட்ட போராட்டத்தை அறிவித்த விவசாயிகள்- திக்குமுக்காடும் மத்திய அரசு!

Published

on

டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பெருந்திரளான விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் போராட்டம் வீரியமடைந்து வரும் நிலையில், அடுத்தக்கட்ட போராட்ட யுக்தியைக் கையிலெடுத்துள்ளது விவசாயிகள் தரப்பு. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி, மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, தேசிய அளவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்களாம்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்னும் நோக்கில், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கும் போராட்டம் செய்தனர் விவசாயிகள். இதன்படி நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளை பிப்ரவரி 6, மதியம் சில மணி நேரங்கள் முடக்கித் தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள் விவசாயிகள். வட இந்தியாவின் பல்வேறு முக்கிய சாலைகள் இதன் மூலம் முடக்கப்பட்டன. இந்நிலையில் அவர்கள் ரயில் மறியல் போராட்டத்தைக் கையிலெடுத்து உள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘உங்கள் போராட்டங்களை முடித்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் உட்கார்ந்து பேசி சுமூகத் தீர்வை எட்டலாம். நாடாளுமன்றம் சார்பில் உங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நான் அழைக்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை என்பது விவசாயப் பயிர்களுக்கு இருக்கும். அது இந்தச் சட்டங்கள் மூலம் அகற்றப்படாது. நாம் அனைவரும் முன்னேற வேண்டும். வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். வேளாண் சட்டங்கள் மூலம் வரும் சீர்திருத்தங்கள் எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

 

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா11 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்11 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்