Connect with us

உலகம்

அமெரிக்காவின் ஒரு நகரத்துக்கே விஷம் வைக்க திட்டம்.. கடைசி நொடியில் நிறுத்தப்பட்ட ஹேக்கரின் முயற்சி.. பகீர் தகவல்கள்!

Published

on

புளோரிடா : அமெரிக்காவில் இருக்கும் ஒரு நகரத்திற்கே விஷம் வைக்க பார்த்த ஹேக்கரின் முயற்சி கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவிற்கு வடமேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓல்ட்ஸ்மர் நகரம். அங்கிருக்கும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி இந்த ஹேக்கிங் முயற்சி நடைபெற்றுள்ளது.

சுமார் 15 ஆயிரம் குடியிருப்பு வாசிகளுக்கு செல்லும் குடிநீரில் வழக்கமாக கலப்பதை விட 100 மடங்கு அதிகமான அளவு சோடியம் ஹைட்ராக்சைடு அமிலத்தை கலக்கும் முயற்சி அங்கிருக்கும் மேற்பார்வையாளர் ஒருவர் கவனித்ததால் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருக்கும் திரவ வடிகால் கிளீனர்களில் சோடியம் ஹைட்ராக்சைடு முக்கிய மூலப்பொருள். நீர் அமிலத்தன்மையை நிர்வகிக்கவும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குடிநீரில் இருக்கும் உலோகங்களைத் தவிர்க்கவும் இது மிகச் சிறிய அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அங்குள்ள கணினியை யாரோ தொலைவில் இருந்து ஹேக் செய்து இயக்கிக் கொண்டிருப்பதை கண்டறிந்தார். கணினியில் உள்ள கர்சரை சிறிது நேரம் அங்கும் இங்கும் நகர்த்துவதையும் கவனித்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சோடியம் ஹைட்ராக்சைட்டின் அளவை அதிகரிக்கும் மென்பொருளை திறந்து அதற்கான அளவை அதிகரிக்க முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் ஆலை ஆபரேட்டர் உடனடியாக தலையிட்டு சோடியம் ஹைட்ராக்சைடு அளவை மாற்றினார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் பாப் குவல்டீரி, சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளீடு கொடுக்கும் அளவை ஒரு மில்லியனுக்கு 100 பகுதிகளுக்கு பதிலாக 11,100 என்கிற அளவில் அதிகரிக்க அந்த ஹேக்கர் முயற்சித்துள்ளார். இது வழக்கமான அளவை விட 100 மடங்கு அதிகமாகும்.

இது வெளிப்படையான குறிப்பிடத்தக்க மற்றும் ஆபத்தான அளவீடாகும். அதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. நீர் அமைப்புகள், நாட்டின் பிற பொது பயன்பாட்டு அமைப்புகளைப் போலவே, முக்கியமான உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் பொதுபாதுகாப்பை சீர்குலைக்க நினைப்பவர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இலக்குகளாக உள்ளன.

இந்த தகவல் வெளியானதும் ஓல்ட்ஸ்மாரில் உள்ள அதிகாரிகள் உடனடியாக கணினியை தொலைவில் இருந்து இயக்குவதற்கான வசதியை துண்டித்தனர். மேலும் மற்ற நகரங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசாங்கங்களின் கணினி உள்கட்டமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படாததால் அதை முறையாக பராமரிக்காமல் ஹேக்கர்களால் நகராட்சி நீர் மற்றும் பிற அமைப்புகளை எளிதில் குறிவைக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இக்காலகட்டங்களில் தொழில்கள் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படுவதால் இது போன்று தொலைவில் இருந்து அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான் என டிராகோஸ் செக்யூரிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் எம் லீ தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கும் குற்றவாளிகள் இனிவரும் காலங்களில் மேலும் பல மாநிலங்களில் குறிவைப்பதையும் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம் என்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உள்நாட்டை சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டினரா என்பது குறித்து எஃப்.பி.ஐ அதிகாரிகள், ரகசிய சேவை மற்றும் பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஆகியவை விசாரித்து வருகின்றன.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!