தமிழ்நாடு
சசிகலா தரப்பினர் பேனர்களை கிழித்தெறிந்த ரவுடி கும்பல்… போலீஸும் உடந்தையா..? – அதிர்ச்சி வீடியோ
நேற்று சசிகலா வருகையையொட்டி, வைக்கப்பட்ட பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை ஒரு ரவுடி கும்பல் கிழித்தெறிந்துள்ளது. இது குறித்தான பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக அவர் சென்னை, தியாகராய நகரில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்தார். இந்தப் பயணம் கிட்டத்தட்ட 22 மணி நேரம் தொடர்ந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அமமுக தொண்டர்களும், சசிகலாவின் ஆதரவாளர்களும் அவரை வரவேற்று வைத்த பேனர்கள், ஃப்ளெக்ஸுகள் மற்றும் கட்-அவுட்டுகளை ஒரு ரவுனி கும்பல் கிழித்தெறிந்துள்ளது. காரில் கத்திகளை வைத்திருந்த அந்தக் கும்பல், அதை வைத்து வழி நெடுகிலும் பேனர்களை சேதப்படுத்தியுள்ளது. அவர்களைத் தட்டிக்கேட்ட அமமுக தொண்டர்களையும் அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. இது குறித்தான வீடியோ வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் போலீஸ் தரப்பும் அந்தக் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவது போல நடந்து கொள்கிறது. அது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதிர்ச்சியளிக்கும் ‘பரபர’ வீடியோ:
Edupudi’s Goons with no Number plate in the car attacked our banners & when our cadres reported, they were attacked by another set of EPS goons in uniform.
Cowardice to the highest level.
Same RSS strategy being followed in my party is sad.
— Sasikala Natarajan (@SasikalaOffl) February 8, 2021