Connect with us

உலகம்

திடீரென தடை விதித்த சவூதி அரேபியா.. நடுவழியிலேயே சிக்கிக்கொண்ட இந்தியர்கள்.. அடுத்து என்ன?

Published

on

ரியாத்: கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதை அடுத்து சவூதி அரசாங்கம் மேலும் 20 நாட்டினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டதால் இந்தியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு உத்தரவை மிக கடுமையாக பின்பற்றிய நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. மக்கள் வெளியே செல்வதில் இருந்து பிற நாட்டினர் உள்ளே நுழைவது வரை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். அங்கு வேலைக்கு சென்ற வெளிநாட்டினர் யாரேனும் விதிகளை மீறினால் உடனடியாக அவர்களுக்கான விசாக்கான அனுமதியை ரத்து செய்து நாட்டிற்கு திருப்பி அனுப்புவது, கடுமையான அபராதங்களை விதிப்பது என இருந்தது. இந்த நிலையில் தான் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

குறிப்பிட்ட நாடுகளை தவிர மற்ற நாட்டினருக்கு சவூதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கு மட்டும் தடை உத்தரவு தொடர்ந்தது. இந்தியாவில் இருந்து ஒருசில இடங்களில் இருந்து மட்டும் சவூதிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் விடுமுறைக்கு இந்தியா வந்த அனைவராலும் மீண்டும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பலரும் துபாய் வழியாக சவூதி செல்ல திட்டமிட்டனர்.அதன்படி, தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து சவூதி அரேபியாவுக்கு நேரடி போக்குவரத்து இல்லாததால் இங்கிருந்து துபாய் சென்று அங்கு 15 நாட்கள் குவாரன்டைன் இருந்துவிட்டு துபாய் வழியாக சவூதி செல்ல திட்டமிட்டனர்.

அவ்வாறு புறப்பட்டு சென்றவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வந்து சேர்ந்தது அந்த அறிவிப்பு. கடந்த 3ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து மீண்டும் 20 நாடுகளுக்கு பயணம் செய்ய சவூதி அரேபிய அரசாங்கம் தடை விதித்தது. அந்த பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், அர்ஜென்டினா, ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், இந்தோனேசியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, சுவீடன், லெபனான், யுஏஇ மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் இருந்து சவூதிக்குள் நுழையவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இப்போது துபாய் வழியாக சவூதிக்குள் நுழைந்து விடலாம் என இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்று அங்கு குவாரன்டைனில் இருந்தவர்கள் அங்கேயே சிக்கிக்கொள்ளும் நிலை உருவானது. வாய்ப்பு கிடைத்தோர் சவூதி எல்லை அடைக்கும் முன்னர் கிடைத்த வழிகளில் உள்ளே சென்றுவிட்டனர். மீதம் உள்ளவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மாட்டிக்கொண்டனர். அதில் பலருடைய விசா காலம் முடிவடையும் நிலையில் இருப்பதால் இந்தியாவுக்கு திரும்பி செல்லவும் முடியாமல் சவூதி அரேபியா உள்ளே நுழையவும் முடியாமல் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாக பலருடைய வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!