Connect with us

கிரிக்கெட்

INDvENG – ஜோ ரூட்டுக்காக ஓடி வந்து உதவிய கோலி… இதை போய் கேலி செஞ்சுட்டாரே ஸ்டுவர்ட் பிராட்!!!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டு நாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியின் முதல் நாளன்று இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு உதவிய ஒரு வீடியோ பலரது பாராட்டுகளைப் பெற்றது. அதை கேலி செய்யும் வகையில் ஸ்டுவர்ட் பிராட் கூறிய கருத்து ஒன்று தற்போது சர்ச்சையாகி வருகிறது.

போட்டிக்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட், அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். மெலும் டோம் சிப்லி மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் முறையே 87 மற்றும் 82 ரன்கள் குவித்தனர். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து, 555 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது. இன்றைய போட்டியில் இந்தியா பேட்டிங் செய்யும் எனத் தெரிகிறது.

 

சென்னை பிட்ச், பேட்டிங் செய்ய ஏதுவாக உள்ளது. இதனால் இந்தப் போட்டி எப்படியும் டிராவில் தான் முடியும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்திய அணி வீரர்கள் இன்று, வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே ஆட்டம் டிராவை நோக்கிச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் போட்டியன்று, வெகு நேரம் களத்தில் இருந்து விளையாடி ஜோ ரூட்டுக்கு, திடீரென்று காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அவர் வலி தாங்க முடியாமல், கீழே படுத்து துடித்தார். இதைப் பார்த்த கேப்டன் விராட் கோலி, ஓடோடி வந்து ரூட்டின் காலைப் பிடித்தார். அவரின் தசைப் பிடிப்பைப் போக்கும் வகையில் செயல்பட்டார். கோலியின் இந்த மனிதாபிமான செய்கையைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, வீடியோவுடன் ஒரு ட்வீட் பதிவிட்டது.

இதற்கு கீழே வந்து கமென்ட் செய்த இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், ‘நானும் இந்தப் போட்டியில் டிரிங்க்ஸ் எடுத்துக் கொண்டு ஓடினேன். என்னையும் பாராட்டி விருது கொடுப்பீர்களா?’ என நக்கல் கலந்த தொனியில் கேள்வி எழுப்பினார். இது தற்போது சர்ச்சையாக வெடித்து வருகிறது.

 

 

இந்தியா1 மணி நேரம் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!