Connect with us

கிரிக்கெட்

என்ன மனுஷன்யா! விராட் கோலியை பாராட்டிய இங்கிலாந்து கேப்டன்.. கொண்டாடும் ரசிகர்கள்

Published

on

சென்னை: இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்ட உடனே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவருக்கு முதலுதவி செய்தது குறித்து ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். கோலியிடம் இருந்து சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறினார்.

இந்தியா இங்கிலாந்து இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ் மற்றும் சிப்ளி நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனாலும் பர்ன்ஸ் 33 ரன்களிலும் லாரன்ஸ் 0
ரன்களிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் இன்று நாள் முடியும் வரை காலத்தில் நின்று இந்திய பவுலர்களை சிதற விட்டார். அவருடன் ஜோடி சேர்ந்த சிப்ளி 87 ரன்கள் எடுத்து முதல்நாள் ஆட்டம் முடியும் கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதிரடியாக ஆடிய ஜோ ரூட் தன்னுடைய நூறாவது போட்டியில் சதம் அடித்து 128 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.இந்த நிலையில் தான் இந்த போட்டியின் இடையே ஜோ ரூட்டுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அஸ்வின் வீசிய 87 வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்த பின்னர் ஜோ ரூட்டின் காலில் லேசான தசை பிடிப்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு மருத்துவர்கள் வந்து உதவும் முன்பே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உடனடியாக சிறிது முதலுதவி செய்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் தான் கோலியின் செயலை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பாராட்டியுள்ளார். முதல் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் பேசியவர், இது ஒரு சிறிய தசைப்பிடிப்பு தான் ஆனாலும் சற்று வெறுப்பாக இருந்தது. விராட் கோலி எனக்கு உதவியது சிறப்பானது. அவரிடம் சிறந்த ஸ்போட்ர்ஸ்மேன்ஷிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார். இதற்கிடையே விராட் கோலியின் செயலை பாராட்டி ஐசிசி, பிசிசிஐ ஆகிய அமைப்புகள் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோவை ஷேர் செய்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரசிகர்கள் பலரும் டோனியின் செயலுடன் விராட் கோலியை ஒப்பிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்தியா53 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!