தமிழ்நாடு
விற்பனைக்கு வர உள்ளது ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்!
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு பெல்412 இ.பி என்ற ஹெலிகாப்டரை அரசு பயன்பாட்டிற்கு வாங்கினார். 11 பேர் பயணம் செய்யக்கூடிய அளவில் உள்ள இந்த நவீன ஹெலிகாப்டர் ஜெயலலிதாவால் பலமுறை பயன்படுத்தப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னரும் பயன்பாட்டில் இருந்த இந்த ஹெலிகாப்டர் கடந்த மார்ச் மாதம் பழுதடைந்தது.
இந்த ஹெலிகாப்டரை சரிசெய்ய அதிக செலவு ஆகும் என்பதால் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டரை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஹெலிகாப்டர் விரைவில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.