உலகம்
பப்புவா நியூகினியாவில் மாபெரும் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை!
போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. உயிரிழப்பும் குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை.
ரபோல் நகரத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. பப்புவா நியூகினியா கடல்பகுதியில், அதன் ஒட்டிய சாலமன் கடல் பகுதியிலும் இதனால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளது.