தமிழ்நாடு
பாஜக அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு: அச்சுறுத்தல் காரணமா?
பாஜக பிரமுகர் அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜகவில் இணைந்த ஒரு சில நாட்களில் அவர் தமிழக பாஜக துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது பாஜகவிற்கு வாக்கு சேகரிக்க தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்துவரும் அண்ணாமலைக்கு திடீரென அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தொடர் அச்சுறுத்தல் அண்ணாமலைக்கு இருப்பதால் தமிழக அரசு தற்போது அவருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கி உள்ளது. பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ’ஒய்’ பிளஸ் பாதுகாப்பு என சற்று முன்னர் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து சுழற்சி முறையில் துப்பாக்கி தாங்கிய ஆறு போலீசார் அவருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
முதல்வர்,அமைச்சர்கள் உள்பட பெரிய விஐபிகளுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, எந்த பதவியும் இல்லாத அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது