சினிமா செய்திகள்
மீண்டும் இணைந்த சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், கெளதம் மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் கௌதம் மேனனின் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ’அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மூன்றாம் முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது
சிம்பு த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது
இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், இசை அமைக்க இருப்பதாக கௌதம் மேனன் தனது டுவிட்டர் தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Dear Universe, Thank you for making this possible.
It’s @arrahman ‘s music & his Aura that will light up our lives once again in our next collaboration.
We truly believe in that.
Thankfully- @SilambarasanTR_
& myself. @IshariKGanesh @VelsFilmIntl #HBDSilambarasanTR— Gauthamvasudevmenon (@menongautham) February 3, 2021
மீண்டும் சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் கௌதம் மேனன் இணைந்து உள்ளதை அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.