தமிழ்நாடு
பிரதமர் மோடியை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ் மகன்: என்ன காரணம்?
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகனும் அதிமுக மக்களவை எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பிரதமர் மோடியை திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிமுக மக்களவை எம்பி இரவீந்திரநாத் குமார் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு இருந்து வரும் நிலையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் சந்தித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு அடிப்படையாகக் கொண்டு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காத நிலையில் அவருடைய மகன் பிரதமரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அதிமுக மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் இன்று பிப்ரவரி 3ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் ரவீந்திரநாத் குமாருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கடவுள் அருளால் அவள் அவர் நீண்ட நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் என்றும் பல ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்