Connect with us

சினிமா செய்திகள்

பிரசாந்த் ஸ்டுடியோவுக்கு இளையராஜா கொடுத்த சாபம்…

Published

on

கோடம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவில் இயக்குநர் வெற்றிமாறனின் புதிய படத்தின் இசையமைப்பு பணிகளை தொடங்கினார் இளையராஜா.

அதன் பின் பேசிய இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வந்ததற்கு வருத்தம் இல்லை. எல்லாம் சவால்தான், எவ்வளவோ இடைஞ்சல்கள் வரும், வந்தன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இனியும் எனது பயணம் இனிதே தொடங்கும் என தீர்க்கமாக பேசினார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம் மற்றும் அவ்வப்போது இந்திப்படங்களும் என சென்னையில் பல மொழிப் படங்கள் தயாராகி வெளியே சென்றன.இங்கிருந்த ஸ்டுடியோ வேறெங்குமில்லாமல் இருந்து.

ஆனால், தற்போது ஜெமினி ,நெப்டியூன், விஜயா கார்டன் என பல ஸ்டூடியோக்கள் காணாமல் போனதன் வரிசையில் பிரசாத் ஸ்டுடியோவும் காணமல் போகவேண்டுமென்று நான் அங்கிருந்து வந்துவிட்டேன்.

என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் தற்போது ஒரு ஸ்டூடியோ வாங்கி துவங்கியுள்ளேன். இன்றைக்குள்ள அட்வான்ஸ்டு சிஸ்டம்கள் எல்லாம் இங்குள்ளன. வாழ்கையில் எவ்வளவோ கடந்துள்ளோம் அது போல தான்.. எல்லாம் சவால் தான் முன்னேறுபவனை தடுக்க இடையூறுகள் வரும்  நாம் அதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும்.

சென்றுக்கொண்டிருக்கும் போது மழை வருகிறது, காகம் எச்சில் செய்கிறது. அதையெல்லாம் கடப்பது போல தான் எல்லாவற்றையும் இதையும் கடந்து செல்ல வேண்டும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா இசையமைத்து வந்தார். ஆனால் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்க இருப்பதாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவை காலி செய்யச் சொன்னது. இதனை எதிர்த்து இளையராஜா நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் இறுதிவரை இளையராஜாவை ஸ்டுடியோவிருக்குள் அனுமதிக்காமல் அவரை காலி செய்ய வைத்தது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் புதிதாக ஒரு இடத்தை வாங்கி ஸ்டூடியோ கட்டமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கினார். அந்த பணிகள் முடிவடைந்து இன்று ஸ்டுடியோ திறக்கப்பட்டு தன்னுடைய படத்தின் பணிகளை இளையராஜா தொடங்கினார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பணிகளுக்காக இளையராஜா இசை அமைக்கும் பணிகளை புதிய ஸ்டூடியோவில் தொடங்கி இருக்கிறார். இளையராஜா விஜய் சேதுபதி வெற்றி மாறன் சூரி உள்ளிட்டோர் ஸ்டுடியோவிற்கு நேரில் வருகை தந்து இசை அமைக்கும் பணிகளில் பங்கேற்றனர்.

 

இந்தியா58 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!