சினிமா செய்திகள்
‘நாடு விட்டு நாடு பறந்து ஓடியது ஏன்?’- நடிகை கஸ்தூரி விளக்கம்
நடிகை கஸ்தூரி தான் அடிக்கடி ஏன் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குப் பறந்து போவதற்கான காரணத்தை விளக்கி உள்ளார்.
90-களில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராக இருந்த நடிகை கஸ்தூரி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது ட்விட்டர் கருத்துகளால் தமிழ் மக்களிடம் கம் பேக் கொடுத்தார். அதன் பின்னர் பல தொலைக்காட்சி விவாத மேடைகளில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலம் அடைந்தார்.
அமெரிக்காவில் கணவர், மகன் மற்றும் மகள் உடன் கஸ்தூரி வசித்து வருகிறார். அவ்வப்போது சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்புகளுக்காக மட்டுமே இந்தியா வந்து செல்கிறார். இதனால் கஸ்தூரி தான் அடிக்கடி அமெரிக்காவுக்குப் பறந்து விடுவதாகத் தெரிவித்துள்ளார். சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கஸ்தூரி ஆளே காணோம் எனப் பதிவிட அதற்கான பதிலைத் தான் தற்போது கஸ்தூரி அளித்துள்ளார்.
கஸ்தூரியின் 13 வது மகள் ஷோபினார் ரத்தப் புற்றுநோயில் இருந்து மீண்டவர். இதனால் மகளுக்காக இந்தியாவுக்கும்- அமெரிக்காவுக்கும் இடையே பயணித்து வருகிறாரா. சமீபத்தில் கூட கஸ்தூரியின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ தனது தலைமுடியை தானம் கொடுத்துள்ளாராம்.
View this post on Instagram