விளையாட்டு
‘எது வாழ்க்கையைப் படமா எடுக்கணுமா..? ஆள விடுங்கட சாமி’- தெறித்து ஓடும் நடராஜன்!
![natarajan 3-2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/natarajan-3-2.jpg)
‘என் வாழ்க்கையை திரைப் படமாக எடுக்க எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது. சாதரணமாக வாழ நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் நடராஜன்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தனது அதிரடி ஆட்டத்தால் வலைப்பந்து வீச்சாளர் ஆகச் சென்ற நடராஜன் உலக சாதனையாளர் ஆக நாடு திரும்பினார். தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார் நடராஜன்.
நடராஜனின் புகழ் அதிகரிக்க அதிகரிக்க அவரது வீட்டுக்கு சினிமா தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் படையெடுத்து வருகிறார்களாம். இதனால் நடராஜனே இதுகுறித்துப் பேசியுள்ளார். நடராஜன் கூறுகையில், “எனது வாழ்க்கையைப் படமாக எடுக்க தினமும் என்னைத் தேடி என் வீட்டுக்கு நிறைய பேர் வருகிறார்கள். என்னைப் பற்றி படம் எல்லாம் எடுக்க எனக்கு விருப்பமே இல்லை. ஒரு சாதரண மனிதனாகவே வாழ விரும்புகிறேன்.
தற்போது சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி உடன் இல்லாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால், 6 மாத காலமாக குடும்பத்துடன் இல்லாமல் விளையாடி உள்ளதால் இந்த ஓய்வு அவசியம் என்பது எனக்குப் புரிகிறது. ஆனாலும், இந்திய அணியில் தொடர்ந்து விளையாடவே விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.