சினிமா செய்திகள்
சிம்பு உடன் ஜோடி சேரும் நயன்தாரா..?- கெளதம் மேனன் திரைப்பட அப்டேட்..!
இயக்குநர் கெளதம் மேனன் திரைப்படத்துக்காக மீண்டும் மூன்றாவது முறையாக இணைகிறார் நடிகர் சிம்பு.
நடிகர் சிம்பு உடன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக கெளதம் மேனன் படத்தில் இணைகிறார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.
நடிகர் சிம்பு தற்போது ஈஸ்வரன் பட வெளியீட்டுக்குப் பின்னர் நல்ல பிஸியான நடிகர் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். மாநாடு படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்த சிம்பு தற்போது பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உடன் நடித்து வருகிறார். இதில் ஒரு டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.
அடுத்து தற்போது புதிதாக கெளதம் மேனன் படத்தில் நாயகன் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் இதர விவரங்கள் கூடிய சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடி சேர நடிகை நயன்தாராவிடம் பேசி வருகிறார்களாம். சிம்பு- நயன்தாரா ஜோடி நல்ல கெமிஸ்டிரி படத்துக்குப் பலமாக இருக்கும் என்றால்லாம் முயற்சி செய்து வருகிறார்களாம். சிம்புவும் நயன்தாராவும் தற்போது நல்ல நண்பர்களாக இருப்பதால் நிச்சயம் நயன் சம்மதம் சொல்வார் என்றே படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.