தமிழ்நாடு
நக்கீரன் கோபால் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் ஆளுநர் மாளிகை!
நக்கீரன் கோபால் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் துணை செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் பெயரில் நேற்று காலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
ஆனால் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை கைது செய்தது அடிப்படையில் தவறு என்றும் அவரைச் சிறையில் அடைக்க முடியாது என்றும் அதிரடியாகத் தீர்ப்பை வழங்கினார்.
நீதிமன்ற தீர்ப்பால் நக்கீரன் கோபால் விடுதலை ஆனார். இந்த வழக்கினை தொடர்ந்த ஆளுநர் மாளிகைக்கு மானம் போனது. எனவே ஏன் நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார் என்று விவாதித்த போது சட்டப்பிரிவு 24-ன் கீழ் மட்டும் காவல் துறை கைது செய்ததால் தான் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தது மட்டும் இல்லாமல் வழக்கினை மேல் முறையீடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனை அறிந்த நக்கீரன் கோபால் மேல் முறையீடு தானே செய்துகொள்ளட்டும், என்ன செய்தாலும் வெளியில் வந்துவிடுவோம் என்று அலட்டிக்கொள்ளாமல் சென்றுள்ளார்.