செய்திகள்
எம்ஜிஆர்… ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர சபதம் ஏற்போம்… முதல்வர் பழனிசாமி
![202101300625343767_Jayalalithaa-Temple-Opening-Ceremony-Chief-Minister_SECVPF - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/202101300625343767_Jayalalithaa-Temple-Opening-Ceremony-Chief-Minister_SECVPF.jpg)
தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. இதை திறந்து வைத்து பேசினார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி…
எம் ஜி ஆர், ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்த இரு பெரும் தெய்வங்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்க சபதம் ஏற்போம். கல்விக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி தமிழக குழந்தைகளை தன் குழந்தைகளாக பாவித்தவர் ஜெயலலிதா.
ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றியுள்ளோம். சென்னை ரயில் நிலையத்திற்கு எம் ஜி ஆர் பெயரை சூட்டி அழகு பார்த்துள்ளோம்.இந்த நாடு வளர, நாடு செழிக்க பாடுபட்ட இரு பெரும் தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்றி உள்ளோம்.