இந்தியா
10 பேரை பலி கொண்ட உத்தரபிரதேச கோர விபத்து… நிவாரணம் அறிவிப்பு…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் – ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மொராதாபாத்தில் உள்ள குண்டர்கி போலீஸ் எல்லைக்குட்பட்ட நான்பூர் என்ற பகுதிக்கு அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் தடயவியல் குழு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இது போன்ற கோர விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மொராதாபாத் எஸ்எஸ்பி பிரபாகர் சவுத்ரி கூறினார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்தில் இறந்தவரின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.