இந்தியா
டெல்லியில் குண்டுவெடிப்பு… குவிக்கப்பட்டுள்ள போலீஸார்..!
டெல்லியில் இன்று இஸ்ரேல் தூதரகத்தின் அருகே திடீரென குண்டு வெடித்துள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு நடந்துள்ளதை டெல்லி காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் நான்கு கார்கள் சேதம் அடைந்துள்ளன. ஒருவருக்கு மட்டும் மிகவும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.05 மணி அளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது எனத் தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியைச் சுற்றி அதிகப்படியான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நடைபாதை அருகே இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டதால் அருகில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த நான்கு கார்களில் கண்ணாடிகள் மட்டும் தெறித்து விழுந்துள்ளன. வெறும் கவனம் ஈர்ப்பதற்கான செயல்பாடாகவே இதைக் காவல் துறையினர் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தூதரகத்துக்கு வெறும் 150 மீட்டர் தொலைவிலேயே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இன்றோடு இந்தியா- இஸ்ரேல் உறவு தொடர்ந்து 29 ஆண்டுகள் நிறைவுறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Today we celebrate 29 years of India-Israel diplomatic relations. ????????????????????
As we wish our #GrowingPartnership a Happy Birthday, let’s take a look back at the key moments from last year which made our relationship stronger than ever????. pic.twitter.com/1qDc8MzgJv
— Israel in India (@IsraelinIndia) January 29, 2021