சினிமா செய்திகள்
பா.ரஞ்சித் – மாரி செல்வராஜ் படத்தில் நாயகன் ஆன த்ருவ் விக்ரம்..!
இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில் நடிகர் த்ருவ் விக்ரம் நாயகன் ஆக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நடிகர் த்ருவ் விக்ரம் தற்போது அப்பா விக்ரம் உடன் ‘விக்ரம் 60’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. அடுத்ததாக தற்போது தனது மூன்றாவது படத்துக்காக த்ருவ் விக்ரம் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இணைந்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் பரியேறும் பெருமால், கர்ணன் படங்களுக்குப் பிறகு இது மூன்றாவது படம் தான்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் நடிக்கும் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்க உள்ளார். இந்தப் படம் முற்றிலும் விளையாட்டு சார்ந்த கிராமத்துப் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கபடி விளையாட்டு வீரராக இந்தப் படத்தில் த்ருவ் விக்ரம் நடிக்க உள்ளார். முதலில் விக்ரம் 60 படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத சூழலில் அதை முடித்து விட்டுத்தான் மாரி செல்வராஜ் படத்தில் த்ருவ் இணைவார் எனக் கூறப்படுகிறது.
Exciting announcement! @beemji @GRfilmssg @LRCF6204 associate with @mari_selvaraj for the next project on the slate!
Starring ???? #DhruvVikram@sooriaruna@pro_guna pic.twitter.com/MwbW9FN6ZQ
— Neelam Productions (@officialneelam) January 28, 2021