Connect with us

கிரிக்கெட்

மீண்டும் கேப்டனாகும் விராட் கோலி… “அப்போ என் நிலைமை என்ன?”- ரஹானே ஓப்பன் டாக்

Published

on

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, படுதோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து அஜிங்கியே ரஹானே, கேப்டன் பொறுப்பை ஏற்று அணியைத் திறம்பட வழிநடத்தி வெற்றி பெறச் செய்தார். ஆஸ்திரேலிய தொடரை அடுத்து, பல தரப்பினர், ‘கோலியைவிட ரஹானே தான் நல்ல கேப்டனாக தெரிகிறார். எனவே அவர் தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும்’ என்கிற குரல்கள் எழுந்தன. இதற்கு ரஹானே, தன் பதிலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

“மீண்டும் இங்கிலாந்து தொடரில் விராட் கோலி தான் அணியின் கேப்டனாக இருப்பார். அதில் எந்த மாற்றமும் இருக்காது. நான் அணியின் துணை கேப்டனாகத் தான் இருப்பேன். அவர் இல்லாத போது அணியைத் திறமையாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதை நான் முழு முயற்சியுடன் செய்வேன்.

ஒரு அணியின் கேப்டனாக இருப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. கேப்டனாக நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பது தான் முக்கியம். இதுவரை ஒரு கேப்டனாக நான் வெற்றி பெற்றுள்ளேன். இனிமேலும் அது தொடரும் என்று நம்புகிறேன்.” என்று மிக வெளிப்படையாக பேசியுள்ளார் ரஹானே. இந்தியா – இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் சென்னையில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஹானே மேலும் கூறுகையில், ‘எனக்கும் விராட் கோலிக்கும் எப்போதும் நல்ல நட்புறவு இருந்துள்ளது. அவர் என் பேட்டிங்கை பலமுறை வெளிப்படையாக பாராட்டியுள்ளார். நானும் அவரது பேட்டிங்கை பலமுறை களத்தில் இருந்து பார்த்து வியந்துள்ளேன். அதே நேரத்தில் இருவரில் யாராவது ஒருவர் தவறாக விளையாடினால், இன்னொருவர் அதைத் திருத்திக் கொள்ளச் சொல்வோம்.

விராட் கோலி ஒரு ஷார்ப்பான கேப்டன். களத்தில் மிகச் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. அதே போல தனிப்பட்ட முறையில் அவர் என்னிடமும் நிறைய எதிர்பார்ப்பார். அவர் எதிர்பார்க்கும் விஷயங்களுக்கு ஈடு கொடுக்க வேண்டியது எனது கடமை தான்’ என்று தகவல்களைத் தந்துள்ளார். இந்திய அணிக்கு வெளியே கோலி – ரஹானே மோதல் வரும் என்று பேசப்பட்டாலும், அவர்கள் இருவருக்கு இடையில் நல்ல நட்புறவு இருப்பதாகவே தெரிகிறது.

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!