தமிழ்நாடு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம்!
கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தேர்வு முறைகளை பொருத்தவரையில் எந்த மாதிரியான மாற்றங்கள் செய்யலாம் என்பதை முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற வல்லுநர்களிடம் கருத்துக்களைக் கேட்டு வருகிறோம். அவற்றில் எட்டுக்குப்பட்டும் முடிவுகளை வைத்து தேர்வு எப்படி நடைபெறும் என்பதை அறிவிப்போம்.
2021 சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், எப்படி இந்த தேர்வுகளை நடத்தலாம் என்பதையும் ஆராய்ந்து வருகிறோம். கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. மேல் நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்கலாம் என்று தற்போது கேட்கப்பட்டுள்ள முடிவுகளில் தெரியவந்துள்ளன.
மாணவர்களின் நலனுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.