தமிழ்நாடு
முடிந்தது 4 ஆண்டு சிறைவாசம்.. இன்று விடுதலையாகிறார் சசிகலா!
சசிகலா 4 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு இன்று விடுதலை செய்யப்பட உள்ளார்.
காலை 9:30 மணியளவில் சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் விடுதலைக்கான கையெழுத்தை வாங்குகின்றனர். பின்னர் முறையாக விடுதலைக்கான பணிகள் நிறைவடைந்து 10:30 மணிக்குச் சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகிறார்.
விடுதலைக்குப் பிறகு பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதா அல்லது வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதா என்று முடிவு செய்யப்படும் என்று உறவினர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சசிகலாவுக்குக் கடந்த 20-ம் தேதி முதல் அதற்காகச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நிலை தேரி வருவதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதரான வார்டுக்கு மாற்றப்படுவதகாவும் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விடோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று முழுமையாகக் குணமடைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்னும் ஓர் இரு நாட்கள் மருத்துவமனையிலிருந்து சசிகலா சிகிச்சை பெற வாய்ப்புகள் உள்ளது.