Connect with us

தமிழ்நாடு

சசிகலா முதல் ஜெயலலிதா வரை… பரபர சூழலில் அதிமுக மா.செ கூட்டம்… என்ன பேசப்பட்டது?

Published

on

சசிகலா விடுதலை, ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி காய் நகர்த்தல்களும் திரை மறைவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது அணி உருவாவதற்கும் இந்த முறை தேர்தலில் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இப்படியான சூழலில் நேற்று எந்த வித சலனமுமின்றி தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

நேற்று சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுகவின் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கூட்டத்துக்குத் தலைமை வகித்தனர்.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும் இருந்த சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 27 ஆம் தேதி அவர் விடுதலையாகி வெளியே வரும் போது அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதையொட்டி, சசிகலாவின் விடுதலையையொட்டி கட்சியில் எந்த வித சச்சரவுகளும் இருக்கக் கூடாது என்பது நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்.

அதேபோல வரும் 27 ஆம் தேதி, சென்னை, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து, திறக்கப்பட உள்ளது. இந்த நினைவிட திறப்பானது மிக பிரம்மாண்டமாக நடத்தவும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பணிகள் மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து, முக்கிய நிர்வாகிகள் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

 

 

 

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!