Connect with us

தமிழ்நாடு

கொரோனா மட்டுமல்ல… இத்தனை உடல் பாதிப்புகளுடன் இருக்கிறார் சசிகலா..! – விக்டோரியா மருத்துவமனை அறிவிப்பு

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது. அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், பெங்களூருவில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அங்கு முழு உடல் சோதனை செய்யப்பட்டு, உடலில் உள்ள பிரச்சனைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மருத்துவமனை சசிகலாவின் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’66 வயதாகும் சசிகலா நேற்று மதியம் 2:30 மணிக்கு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் தொண்டைப் பகுதியில் அதீத பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. கொரோனா தொற்றும் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பது இரவு 9:30 மணிக்கு உறுதி செய்யப்பட்டது.

தற்போது அவருக்கு கோவிட்-19 தொற்றுடன் காய்ச்சல் இருக்கிறது. மேலும் இரண்டாம் நிலை நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் தைராய்டு பிரச்சனைகளும் உள்ளன. கோவிட்-19 வழிமுறைப்படி தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்’ என்று இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் விக்டோரியா மருத்துவமனைத் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

அரசு மருத்துமவனையில் சசிகலாவுக்கு சரி வர சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்று அவரது உறவினர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்த நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், சசிகலாவின் நிலை குறித்து கூறும் போது, ‘சசிகலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து 12 மணி நேரம் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இதுவரை அவரை நாங்கள் யாரும் நேரில் பார்க்கவில்லை. அவருக்கு யார் மருத்துவம் செய்து வருகிறார் என்பது கூட எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

சசிகலாவுக்கு சி.டி ஸ்கேன் எடுப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால், மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து விட்டதாக சொல்கிறார்கள். சரி, மேல் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்றாலும், யாரும் சரி வர தகவல்களை சொல்ல மறுக்கிறார்கள். உண்மையில், எங்களுக்கும் இதுவரை செவி வழிச் செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. முறையான தகவல்கள் வரவில்லை’ என்று விரக்தி மன நிலையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திவாகரன் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில், ‘சசிகலாவின் உயிருக்கு சிலரால் ஆபத்து நேர்ந்துள்ளது’ என்றார்.

 

 

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!