சினிமா செய்திகள்
வழக்கத்துக்கு மாறாக அன்பைப் பொழியும் சிம்பு… சீர்வரிசையால் குழம்பிப் போன திரை உலகம்!
நடிகர் சிம்புவின் வழக்கத்துக்கு மாறான அன்பு நடவடிக்கைகளால் திரை உலகத்தினர் குழம்பிப் போய் உள்ளார்களாம்.
நடிகர் சிம்பு நடிப்பில் இந்தப் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். பெரும் பாராட்டுகள் இல்லை என்றாலும் சிம்புவை பாராட்டித் தான் வருகிறார்கள் திரை உலகத்தினர். காரணம் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தை வெறும் 35 நாட்களில் நடித்து முடித்துக் கொடுத்துள்ளார் சிம்பு. இது பெரிய ஆச்சர்யம் தான்.
காரணம், படப்பிடிப்புகளுக்குத் தாமதமாக மட்டுமே சிம்பு வருவார் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. இந்த சூழலில் ஈஸ்வரன் படத்தை 35 நாட்களில் முடித்தார், மாநாடு படப்பிடிப்புகளிலும் மழை என்றும் பார்க்காமல் தொடர்ந்து காத்திருந்து நடித்துக் கொடுத்துள்ளார். அடுத்தடுத்து பத்து தல, இயக்குநர் ராம் உடன் ஒரு படம் என பிஸியாக இருந்தாலும் சிம்பு சொன்ன நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்த ஸ்பாட்டில் அமர்ந்து விடுகிறாராம்.
கூடுதலாக திரை அரங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்காக ஈஸ்வரன் சார்பில் பொங்கல் சீர் வரிசைக் கொடுத்தும் அசத்தி உள்ளார் சிம்பு.
The past year has been very hard for theaters. We decided to do something nice for them to thank them for being pillars of support for good films! ???? We honoured theater employees with #EeswaranPongalSeeru ????????#Eeswaran @SilambarasanTR_ @DCompanyOffl #Susienthiran @gobeatroute pic.twitter.com/SWNWCLELAb
— Madhav Media (@madhavmedia) January 17, 2021