தமிழ்நாடு
சசிகலா ஐசியுவில் அனுமதி! மீண்டும் மூச்சு திணறல்!!
![Sasikala 3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/Sasikala-3.jpg)
சசிகலாவுக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டில் இருந்து ஐசியூ.,க்கு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி வெளியே வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
பின்னர் சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட சசிகலா, பெங்களூரில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில், நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு இயல்பு நிலைமைக்கு திரும்பினார்.
இப்படியான சூழலில் நேற்று நள்ளிரவு மீண்டும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சாதாரண வார்டில் இருந்து அவசர சிகிச்சை பிரிவு ஐசியூவுக்கு மாற்றப்பட்டார்.