Connect with us

செய்திகள்

நாடாளுமன்றத்தில் இனி ஓசி சாப்பாடு கிடையாது

Published

on

நாடாளுமன்ற கேன்டீனுக்கான மானியத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் பிர்லா கூறியுள்ளார்.

இனி குறைந்த விலைக்கு எம்பிக்களுக்கு உணவு வழங்கப்படாது. நாடாளுமன்றத்தில் எம்பிக்களுக்கான கேன்டீன் உள்ளது. இங்கு காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் மலிவான விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கேண்டின் 1968 முதல் வடக்கு ரயில்வே நடத்தி வந்தது. இதன் பின்னர் தற்போது இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கவுள்ளது.பிப்ரவரி 1 ஆம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் 8 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

சபாநாயகர் ஓம் பிர்லா இது குறித்து கூறியதாவது:

ஜனவரி 29 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கு முன்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். எம்பிக்களுக்கு அவர்களது வீடுகளிலேயே ஆர்டி பிசிஆர் பரிசோதனை நடத்துவதற்கு வசதிகள் செய்யப்படும். நாடாளுமன்ற வளாகத்தில் ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்படும். ராஜ்யசபா காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். லோக்சபா மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். நாடாளுமன்ற கேண்டீனுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களும் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால் கேன்டீனில் எம்பிக்கள் உணவு உண்ண கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டும். மானியம் நிறுத்தப்படுவதால் நாடாளுமன்ற செயலகத்திற்கு வருடத்திற்கு 8 கோடி மிச்சமாகக் கூடும் என கருதப்படுகிறது.

ஜோதிடம்4 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்14 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்26 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்38 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்59 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!