Connect with us

செய்திகள்

ஊழல் செய்தால் தூக்குத்தண்டனையா?

Published

on

ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வழக்கு கோரப்பட்டது.

 

திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு கோரப்பட்டது. அதில் கூறியதாவது, “இந்தியாவில் உள்ள மக்கள் வருமான வரி, சேவை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி, ஜி.எஸ்.டி ஆகியவற்றைச் செலுத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் பணத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். பல்வேறு தரப்பட்ட ஊழல்கள் அரசுத் துறைகளில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வணிகத்துறை, பத்திரப்பதிவு துறை,  போக்குவரத்துத்துறை, வருவாய்த்துறை மற்றும் கல்வித் துறை ஆகியவற்றின் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருகின்றன. ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசுத்துறை அதிகாரிகள் எவ்வித பயமுமின்றி ஊழல் செய்து வருகின்றனர். ஊழல் தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு பயனில்லை. 2021 மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்கு முன்பாக ஊழல் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாகத் தூக்கு தண்டனை, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் அவர்களின் சொத்துக்கள், நகைகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்புச் சட்டம் 1988 இல் சட்டதிருத்தம் செய்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி எம்.எம் சுந்தரேஷ்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்டத்தில் திருத்தம் கொண்டு வர கூடிய அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனக் கூறி சட்டம் ஏற்றும் அதிகார கொண்ட அமைப்பிடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தியா52 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!