Connect with us

கிரிக்கெட்

INDvAUS – வெறித்தனமான வேகத்தில் வந்த பவுன்சர்கள்… மலையென அசராமல் நின்ற புஜாரா – இது தைரியத்தின் உச்சம்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு, ‘தி வால்’ என்று பெயரெடுத்தவர் செத்தேஷ்வர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் கடினமான தடுப்பாட்டத்தில் வல்லவர் புஜாரா. அதை நான்காவது டெஸ்டின் 5வது நாள் ஆட்டத்தில் திறம்பட வெளிக்காட்டி வருகிறார் புஜாரா.

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. கடைசி இன்னிங்ஸில் 328 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இந்தியாவுக்கு, இலக்கு வைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மீண்டும் வெற்றி பெறும் கனவோடு தனது இன்னிங்ஸை ஆரம்பித்தது இந்தியா.

இதுவரை ரோகித் சர்மா 4 ரன்களுக்கும், சுப்மன் கில் 91 ரன்களுக்கும், கேப்டன் அஜிங்கியே ரஹானே 24 ரன்களுக்கும் அவுட்டாகி பெவிலியன் திரும்பியுள்ளார்கள். களத்தில் தற்போது அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட் மற்றும் தடுப்பாட்ட கிங் புஜாரா ஆகியோர் உள்ளனர். பன்ட் 46 பந்துகளுக்கு 16 ரன்னிலும், புஜாரா 187 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். இந்த இருவர் களத்தில் வெகு நேரம் இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி வசப்படும்.

இன்றைய நாளில் இன்னும் 29 ஓவர்கள் பாக்கியிருக்கின்றன. அதில் இந்தியா 134 ரன்கள் எடுத்தாக வேண்டும். எப்படியும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இந்தியா, வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

இன்றைய ஆட்டத்தில் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்த, ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கையிலெடுத்த ஆயுதம் பவுன்சர். விடாமல் புஜாராவுக்கு பவுன்சர்களைப் போட்டு அவரை நோகடித்தனர். பவுன்சராக வீசப்பட்ட பல பந்துகள் புஜாராவின் உடலிலும், ஹெல்மட்டிலும் தான் பட்டன. ஒரு முறை ஹெல்மெட் டேமேஜ் ஆகும் அளவுக்கு இருந்தது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் மூர்க்கமான பவுன்சர்கள். புஜாராவின் தடுப்பாட்டம் இந்தப் போட்டியில் அதிக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

புஜாரா பவுன்சர்களை சமாளித்த விதம் குறித்தான வீடியோ:

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!