தொழில்நுட்பம்
Signal செயலியில் ஏற்பட்ட திடீர் பிரச்சனை; பிரைவஸி பாதுகாக்கப்படுமா? பயனர்களே உஷார்!!!
இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி, வாட்ஸ்அப். ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப், சில நாட்களுக்கு முன்னர் தன் பயனர்களுக்கு ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டது. அதன்படி, வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் புதிய பிரைவஸி கொள்கைகள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தப் புதிய பிரைவஸி கொள்கைகளுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது.
குறிப்பாக, இனி வாட்ஸ்அப்பில் நாம் உரையாடும் எந்த விஷயமும் பாதுகாக்கப்படாது என்று சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறி சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை பலர் தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இப்படி தொடர்ச்சியாக எதிர்வினைகள் வந்ததைத் தொடர்ந்து, தனது பிரைவஸி கொள்கை அப்டேட் விவகாரத்தைக் கைவிட்டது வாட்ஸ்அப் நிறுவனம். ஆனால், வாட்ஸ்அப் மீது பலருக்கும் எதிர்மறையான கருத்து உருவாகி விட்டது. அதைப் போக்க அந்த நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது.
As an unfortunate side effect of this outage, users might see errors in some of their chats. This does *not* affect your chat’s security, but you may have missed a message from that contact. The next Signal app updates will fix this automatically. Here’s what you can do now…
— Signal (@signalapp) January 17, 2021
வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பார்க்கப்பட்ட சிக்னல் செயலியிலும் தற்போது பிரச்னை ஒன்று எழுந்துள்ளதாம். அந்தப் பிரச்சனை மூலம், ஒருவருடன் நாம் சாட்டிங் செய்தால், அதில் சில தகவல்கள் தன்னால் மறைந்துவிடுமாம். இந்த கோளாறால், சிக்னல் செயலி பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு விளக்கம் கொடுத்துள்ள சிக்னல் நிறுவனம், ‘இந்தப் பிரச்சனையால் சாட்டிங்கில் சில எரர் வரலாம். அதனால் உங்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படாது. சிக்னல் செயலியின் அடுத்த அப்டேட் இந்தப் பிரச்சனையை சரி செய்யும்’ என்று விளக்கம் கொடுத்துள்ளது.