Connect with us

தொழில்நுட்பம்

WhatsApp-ல் இனி நமது பிரைவஸி அவ்ளோதானா..?- சில வதந்திகளும் விளக்கங்களும்

Published

on

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாட்டிங் செயலி வாட்ஸ்அப். அதன் பிரைவஸி கொள்கைகளில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அந்த தேதிக்குள் வாட்ஸ்அப்பின் மாற்றப்பட்ட பிரைவஸி கொள்கைகளுக்கு, அதைப் பயன்படுத்தும் நபர் அனுமதி கொடுக்கவில்லை என்றால், செயலியை பயன்படுத்த முடியாது என்று நோட்டிஃபிகேஷன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த மாற்றப்பட்ட பிரைவஸி கொள்கை மூலம், இனி வாட்ஸ்அப்பில் நாம், நமது நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பேசும், பகிர்ந்து கொள்ளும் உரையாடல்கள், புகைப்படங்கள், காணொலிக் காட்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் பார்க்க முடியும் என்று பரவலாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த தகவல்களை மூன்றாம் தரப்பினரிடமும் வாட்ஸ்அப் விற்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

இப்படி பரவிய தகவல்களால் வாட்ஸ்அப்பை பலர், தங்கள் ஸ்மார்ட் போன்களில் இருந்து நீக்கிவிட்டனர். பலர் ‘சிக்னல்’ மற்றும் ‘டெலிகிராம்’ போன்ற சாட்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த ‘தகவல்களுக்கு’ முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் வாட்ஸ்அப் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளது. அவை பின் வருமாறு:

1.உங்கள் தனிப்பட்ட மெஸேஜ்களையோ அல்லது அழைப்புகளை வாட்ஸ்அப்பால் பார்க்க முடியாது. ஃபேஸ்புக் நிறுவனமும் அதைப் பார்க்காது.

2.நீங்கள் மெஸேஜ் செய்யும் அல்லது அழைக்கும் நபர்களுடைய தரவுகளை வாட்ஸ்அப் சேமிக்காது.

3.நீங்கள் வாட்ஸ்அப் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் லொகேஷன்களை வாட்ஸ்அப் நிறுவனம் பார்க்காது. ஃபேஸ்புக்கும் பார்க்காது.

4.உங்கள் கான்டேக்ட்களை வாட்ஸ்அப் நிறுவனம், ஃபேஸ்புக்கிடம் பகிர்ந்து கொள்ளாது.

5.வாட்ஸ்அப் குழுக்கள் பிரைவஸியுடன் இயங்கும்.

6.நீங்கள், உங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் மெஸேஜ்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம்.

7.நீங்கள் உங்கள் தரவுகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

பொதுவாக, ‘இனி வாட்ஸ்அப்பில் பகிரப்படும் எந்த தகவல்களுக்கும் உத்தரவாதம் கிடையாது’ என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், இப்படியான விளக்கத்தை வாட்ஸ்அப் நிறுவனத் தரப்பு கூறியுள்ளது. இது எந்தளவுக்கு மக்களிடம் எடுபடும் என்று தெரியவில்லை.

கடந்த சில நாட்களில் வாட்ஸ்அப் குறித்து தொடர்ச்சியாக பரபரப்பட்ட இந்த மாதிரியான தகவல்களால், சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

டெலிகிராம் தரப்பும், வாட்ஸ்அப்பின் இந்த புதிய பிரைவஸி பாலிசியை கடுமையாக விமர்சித்து வருகிறது. ‘இது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் பயனர்களை மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளது டெலிகிராம் நிறுவனத் தரப்பு.

 

 

 

 

 

author avatar
seithichurul
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்24 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!