டிவி
ஏன் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கவில்லை? சேனல் காரணமா?
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இன்று நான்கு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளனர்.
அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் மற்றும் ரேகா ஆகிய நான்கு பேரும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இந்த சூழலில் பிக்பாஸ் வீட்டுக்குள் சுரேஷ், சனம், அனிதா, வேல்முருகன், சம்யுக்தா ஆகியோர் வரவில்லை. ஆனால், இவர்களை எல்லாம் கேட்காமல் ட்விட்டர்வாசிகள் சுரேஷ் சக்கரவர்த்தி ஏன் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
ட்விட்டரில் ரசிகர்கள் குவித்த கேள்விகளுக்கு சுரேஷ் சக்கரவர்த்தியே நேரடியாக பதில் அளித்துள்ளார். சுரேஷ் கூறுகையில், “பிக்பாஸ் வீட்டுக்குள் இதுவரையில் அழைக்கப்படாத ஒரே போட்டியாளர் நான் மட்டும் தான்” என பதில் அளித்துள்ளார். சேனல் சார்பில் சுரேஷை அழைக்கவில்லையோ என ரசிகர்கள் தற்போது அடுத்த கேள்வியை எழுப்பத் தொடங்கி உள்ளனர்.
ஆனால், வராத மற்ற போட்டியாளர்களுக்குக் கூட அழைப்பு போயிருக்கிறதாம். ஆனால், சுரேஷ் சக்கரவர்த்திக்கு மட்டும் அழைப்பே வரவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.