Connect with us

கிரிக்கெட்

INDvAUS – சிட்னியில் சிராஜ் மீது நிறவேறி தாக்குதல்; பரபரப்பான சூழலால் நிறுத்தப்பட்ட போட்டி!

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, சிட்னியில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் நிறவெறி எண்ணத்துடன் சாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து போட்டி சில நிமிடங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, 312 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. இதன் மூலம் போட்டியை வெல்ல இந்தியாவுக்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது இந்திய அணி, 85 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்த நிலையில் விளையாடி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது, முகமது சிராஜ், ஃபைன் லெக் பகுதியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது சில ரசிகர்கள், அவரை நிறவெறி எண்ணத்துடன் சாடியுள்ளனர். இதனால் கொதிப்படைந்த சிராஜ், நடுவர்களிடம் அது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. நிறவெறித் தாக்குதலில் ஈடுபட்ட 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து உள்ளூர் போலீஸ் வெளியேற்றியது. சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் போட்டி நடந்தது. ஆஸ்திரேலிய பயணத்தில், இதற்கு முன்னதாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சிராஜுக்கு நிறவெறித் தாக்குதல் நடந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அதைப் போன்ற சம்பவம் மைதானத்திலேயே நடந்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறது.

 

 

இந்தியா51 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!