Connect with us

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் ஆதரவு!

Published

on

பள்ளிகளைத் திறப்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் ஆதரவு அளித்துள்ளதாக பள்ளிகல்வி துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியுள்ளார்.

பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிகல்வித் துறை சார்பில்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதில் மாணவர்கள் நலனும், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் அடங்கி இருப்பதால் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பர் மாதம் நடந்த கருத்துக்கணிப்பில், பெற்றோர்கள் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தினசரி இறப்பு விகிதமும் சரிந்து வருகிறது. எனவே அரசு சார்பில் இன்றும் நாளையும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகணிப்பு நடத்தப்படும். அதன் பிறகே அரசு சார்பில் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது, ‘இன்று மற்றும் நாளை மாலை வரை பெற்றோர்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்படும். பாதுகாப்பான முறையில் பள்ளிகள் நடத்துவது குறித்து உயர் மட்ட குழுவுடனும், மருத்துவ குழுவுடனும் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதன் பிறகே முடிவுகள் அறிவிக்கப்படும். பெரும்பாலும் இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புள்ளது’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த  ஜூன் மாதம் நோய்த்தொற்று தீவிரமடைந்த நிலையில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவும் அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில தனியார் பள்ளிகளில் மட்டும் மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா59 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!