சினிமா
பிக்பாஸ் போட்டியில் வென்ற 50 லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுக்கவுள்ளார் நடிகை ரித்விகா
பிக்பாஸ் சீசன் 2 நடிகை ரித்விகா டைட்டில் வென்றவர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரித்விகா பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த ஓராண்டுக்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து வந்த ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் அரை டசன் படத்தில் கமிட் ஆகியுள்ளார். தற்போது நடிகை ரித்விகா, “டார்ச் லைட், சிகை, நேத்ர, மாடு” போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
அவர் ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அது மட்டுமின்றி அவர் பிக்பாஸ் போட்டியில் வென்ற 50 லட்சம் ரூபாய் பணமும் கோப்பையும் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தைச் சில விஷயங்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
அதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் ரித்விகா டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
There are lots of rumours going around about my new movie offers and me donating to various organisation.
I will post details regarding my movie offers and other details in my Twitter account (@Riythvika).
Thanks a lot for your love and unconditional support— Riythvika✨ (@Riythvika) October 4, 2018