உலகம்
ஒரு வீடியோவால் ரூ. 20 லட்சம் சம்பாரித்து பிச்சைக்காரர்.. எப்படி தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள்.
இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றின் காரணமாக இவருக்கு இவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ”சைரகாசை” சேர்ந்தவர் ஜெர்மி டியூபிரெஸ்னே.
இவர் மீது ”டன்கின் டொனால்ட்” உணவக ஊழியர் சூடு தண்ணீர் ஊற்றியுள்ளார்.இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலானது.
எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அந்த நபருக்கு உதவ வேண்டும் என்று இணையத்தில் குரல் கொடுத்தனர். இதற்காக பிரச்சாரம் போல இணையத்தில் நடத்தி அந்த நபருக்கு பணம் வசூல் செய்தனர்.
இதனால் அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள்.