டிவி
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஆஜித்!
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் ஆஜித். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளராகப் பங்கேற்று வந்தார்.
மூன்றாவது வாரமே இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் பிக்பாஸ் அளித்த எவிக்ஷனில் இருந்து தப்பிக்கும் பாஸ் மூலம் தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
இந்த பாஸ் ரம்யா பாண்டியனுக்குக் கிடைக்க வேண்டியது. ஆனால் அவர் ஆஜித் ஒரு சிறுவன், சாதிக்க வேண்டும் என்பதற்காக இவருக்கு விட்டுக் கொடுத்தார்.
எவிக்ஷன் சென்று திரும்பினாலும், பிக்பாஸ் வீட்டில் இவர் பெரியதாக ஏதும் சோபிக்கவில்லை. பிற போட்டியாளர்களுடன் மீண்டும் மீண்டும் நாமினேஷனுக்கு வந்தார். நாமினேஷனுக்கு வந்த போது எல்லாம் நூல் இலையில் எவிக்ஷனில் இருந்து தப்பித்தும் வந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இவருக்கும் ஆரிக்கும் முதல் முதல் வாரம் முதலே ஒத்துப்போகவில்லை. இதற்குக் காரணம் ஆரி அஜித்துக்குக் கொடுத்த அட்வைஸ் மற்றும் எப்போது பார்த்தாலும் சின்ன பயன் என்று கூறிவந்தது என்று பல முறை ஆஜித் புலம்பினார். ஆனால் பால் பிடி டாஸ்க்கின் போது ஆரி அளித்த அட்வைஸை ஆஜித் விரும்பினார்.
அதை எவிக்ஷனுக்கு பிறகு கமல் உடன் பிக்பாஸ் மேடையை பகிர்ந்துக்கொண்டு, நண்பர்களுடன் பேசும் போதும் அதை குறிப்பிட்டார்.
கடந்த ஒருவாரமாக ஆஜித் நன்றாக பிக்பாஸ் வீட்டில் விளையாடி வந்த நிலையில், அவர் வெளியேற்றப்பட்டார். ஆனால் பெரும்பாலானவர்கள் ரம்யா பாண்டியன் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கணித்து வந்தனர். இன்னும் 2 வாரங்களே போட்டி பாக்கியுள்ளது.