சினிமா செய்திகள்
சூர்யா- பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிறதா ‘கத்திக்குத்து’..?
நடிகர் சூர்யா-வின் 40-வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குவார் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு கத்திக் குத்து எனப் பெயரிப்படலாம் என திரைத் துறை வட்டாரங்களுக்குள் செய்தி உலாவுகிறது. ஆனால், உறுதியான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பசங்க-2 படத்துக்குப் பின் சூர்யா 40 மூலம் மீண்டும் நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் உடன் இணைகிறார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வழங்க உள்ளது. இதுகுறித்த லேசான அப்டேட்டை இயக்குநர் பாண்டிராஜ் வழங்கி உள்ளார். அதாவது இன்னும் 2 அல்லது 3 கதா பாத்திரங்கள் உறுதி செய்யப்பட்ட உடன் படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பதிவில் கத்தி ஈமோஜி போட்டிருப்பதால் நிச்சயமாக சூர்யா 40 படத்துக்கு கத்திக்குத்து என்றே பெயரிடப்படும் என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள் ????
2021 நமக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையும் ????
உங்கள் எதிர்பார்பும் , ஆவலும் புரிகிறது !
சூட்டிங் பிப்ரவரியில்தான்.
இன்னும் முக்கியமான 2 கேரக்டர் Final ஆனதும் 2, 3
வாரங்களில் சம்பவங்கள் தொடங்கும்..
காத்திருப்போமே????????#Suriya40 ????— Pandiraj (@pandiraj_dir) January 1, 2021