கிரிக்கெட்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலிக்கு என்ன ஆச்சி.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஆஞியோ பிளாஸ்திரி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று லேசான மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் இதயத்திற்குச் செல்லும் ரதத்துக்குழாயில் இரண்டு அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்காக கங்குலிக்கு ஆஞியோ பிளாஸ்திரி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, கங்குலியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது கங்குலி நலமுடன் உள்ளார், மருத்துவர்கள் சிறப்பான முறையில் அவருக்குச் சிகிச்சை வழங்கி வருவதாகவும் கூறினார்.